அமித் ஷா சொல்லியும் கேக்கல.. ராஜஸ்தானில் பெரும் சிக்கல்! அதிருப்தி வேட்பாளர்களால் கையை பிசையும் பாஜக
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜக நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பது பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் கடந்த 1993 ஆண்டுக்கு பிறகு இதுவரை ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்ததாக வரலாறு இல்லை. எனவே வரும் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கும் மேல் வென்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த முறை ஆளும் கட்சி மீதான அதிருப்தி அலையை பயன்படுத்தி காங்கிரசை வீழ்த்த பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அதேவேளையில், கடந்த கால வரலாறுகளை மாற்றி ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரசும் பல்வேறு வியூகம் வகுத்து வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 25 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் காங்கிரஸ் - பாஜக ஆகிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மீண்டும் ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வரும் பாஜகவுக்கு அதிருப்தியாளர்களால் கடும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் பாஜகவை சேர்ந்த 25 க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் ராஜ்பால் சிங் ஷெகாவத் இந்த அதிருப்தியாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அதிருப்தியாளர்களில் ஒரு சிலரை பாஜக மேலிடம் சமாதானப்படுத்தி வாபஸ் பெற வைத்தது.
இருந்தாலும் 25 க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெறாமல் களத்தில் உள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் போனில் பேசி சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் இதிலும் பலன் கிடைக்கவில்லை. அஷு சிங்சுருபுரா, யூனுஷ் கான், ஆகியோரிடம் கட்சி மேலிடம் சமாதன முயற்சியை மேற்கொண்ட போதும் அதை ஏற்காமல் சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ளனர். ராஜஸ்தானில் இந்த முறை மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட அக்கட்சி நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications