5ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: பள்ளி தலைமை ஆசிரியர் கைது!

Subscribe to Oneindia Tamil

சங்ரூர்: பஞ்சாப்பில் 5ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம், சாங்ரூர் அருகேயுள்ள மலர்கோட்லாவில் மதராஸா பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக முகமது அம்ஜத் கான் (25) பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 26ஆம் தேதி ஸ்பெஷல் கிளாஸ் எனக்கூறி சில மாணவிகளை பள்ளிக்கு அழைத்திருக்கிறார். பள்ளிக்கு வந்த 4 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து வெளியில் சொன்னால், தங்கள் மீது தலைமை ஆசிரியர் ஏதேனும் நடவடிக்கை எடுத்து விடுவார் என பயந்த அந்த மாணவிகள், தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்லவில்லை.

இந்நிலையில், கடந்த 17 மற்றும் 26ஆம் தேதிகளில் அதே பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் 13வயது மாணவியையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அம்ஜத் கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+