பத்திரிகையாளரை பலாத்காரம் செய்த வழக்கு- தருண் தேஜ்பால் முன்ஜாமீன் மனு நிராகரிப்பு!
பனாஜி: பலாத்கார வழக்கில் டெஹல்கா பத்திரிகையின் முன்னாள் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கோவா நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து தருண் தேஜ்பால் கோவா போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன.
கோவா ஹோட்டல் ஒன்றில் சக பெண் பத்திரிகையாளருக்கு தருண் தேஜ்பால் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது புகார். இதைத் தொடர்ந்து தருண் தேஜ்பால் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தமக்கு முன் ஜாமீன் கோரி தருண் தேஜ்பால் பனாஜி அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் முதலில் பிற்பகல் 2.30 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இன்னும் சிறிது நேரத்தில் தேஜ்பால் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு!
இந்நிலையில் நேற்று மாலை கோவா சென்றடைந்தார் தருண் தேஜ்பால். பின்னர் அவர் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார். அவருக்கு இன்று காலை 10 மணி வரை இடைக்கால ஜாமீனை நீட்டித்து வழங்கியது பனாஜி நீதிமன்றம்.
அத்துடன் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று காலைக்கும் ஒத்திவைத்தது நீதிமன்றம், இதைத் தொடர்ந்து தற்போது முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது தருண் தேஜ்பாலும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார்.
14 நாள் கஸ்டடி கேட்ட போலீஸ்
இன்றைய விசாரணையின் போது, பலாத்கார வழக்கின் முழு விசாரணை முடிவடையும் வரை தருண் தேஜ்பால் கோவாவில் தங்கி போலீஸுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்று அவரது தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கோவா போலீஸ் தரப்பில், தருண் தேஜ்பாலை 14 நாள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
பின்னர் இந்த விசாரணை மாலை 4.30மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாலையில் தீர்ப்புக்காக அனைவரும் நீதிமன்றத்தில் கூடினர். தருண் தேஜ்பால் க்ரைம் பிரிவு போலீஸ் அலுவலகம் சென்றார்.
முன் ஜாமீன் மனு நிராகரிப்பு
இரவு 8 மணியளவில், தருண் தேஜ்பாலின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். கோவா நீதிமன்ற தீர்ப்பால் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மேற்கொண்ட தேஜ்பாலின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. கோவா போலீசார் எவ்வித சட்ட குறுக்கீடும் இல்லாமல் இனி தேஜ்பால் விவகாரத்தை கையாள்வர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications