ஜம்மு - காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை.. பாதுகாப்பு படை அதிரடியில் 4 தீவிரவாதிகள் பலி
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் அதிரடி தாக்குதலில், இதுவரை 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் தாரம்தோரா கேகம் பகுதியில் அதிகாலை முதலே பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம், கேகம் என்னும் இடத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து 33-வது ராஷ்டீரிய ரைபிள் படைப்பிரிவினருடன் இணைந்து, ஜம்மு-காஷ்மீர் போலீசாரின் சிறப்பு அதிரடிப் படையினர் அப்பகுதியை இன்று அதிகாலை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் தங்களை தேடுவதை அறிந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் இதனையடுத்து உஷாரான படை வீரர்கள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் சரணடைந்து விடுமாறு எச்சரித்தனர்.
ஆனால் எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட துவங்கினர். இதனால் பதில் தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் தற்போது வரை 4 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான வெடிபொருட்களும், துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். எஞ்சியுள்ள தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் படையினர் தொடர்ந்து ஈடுட்டு வருவதாக ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.
முன்னதாக கடந்த புதன்கிழமை ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நிகழ்த்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி குண்டுகளை அம்மாநில காவல்துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications