வானத்தை பொத்துக்கிட்டு ஊற்றும் மழை.. மூணாறு கடும் வெள்ளப்பெருக்கு.. நீரோடு போன பெரியவாரை தரைப்பாலம்
Recommended Video
மூணாறு: கேரள மாநிலத்தில் உள்ள மூணாறில் கனமழை பெய்து வருகிறது. இதனால் உடுமலைப்பேட்டை- மூணாறு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
ஓயாமல் மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு அதீத மழை கொட்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூணாறு
இந்த நிலையில் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மூணாறு பகுதியில் நேற்று இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

போக்குவரத்து துண்டிப்பு
இதனால் மூணாறை சுற்றி நீர் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக பெரியவாரை தரைப்பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் உடுமலைப்பேட்டை- மூணாறு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மறையூரிலிருந்து மூணாறுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்
முத்திரைப்புழா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் மூணாறுக்கு வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

2 நாட்களுக்கு மழை
பாலங்களில் கைவிட்டு துழாவும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு இதே நிலை என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications