3வது நாளாக மும்பையில் கனமழை.. ரயில் சேவைகள் பாதிப்பு.. வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்
மும்பையில் பெய்துவரும் கனமழையால் ரயில்கள் இயக்கப்படுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

மும்பை: மும்பையில் 3வது நாளாக தொடர்ந்து, பெய்துவரும் கனமழையால் ரயில்கள் இயக்கப்படுவதில் தடை ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பையின் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். நல்லாசோபாரா ரயில் நிலையத்தில் 460 மி.மீ. அளவு உயரத்துக்கு மழைநீர் தேங்கியுள்ளது.

மும்பையில் இருந்து இயக்கப்படும் கர்னாவாடி எக்ஸ்பிரஸ் ரயில், டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மும்பை சென்ட்ரல் கோட்ட மேலாளர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நேற்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை தெற்கு மும்பை, பயந்தர், சர்ச்கேட் இடையே மிதமான வேகத்தில் உள்ளூர் ரயில்கள் இயக்கப்பட்டன.
மும்பை நல்லாசோபாரா வாசை ரயில் நிலையங்களில் 1500 பயணிகளுக்கு மேல் சிக்கினர். அவர்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் அவர்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
மும்பை செம்பூர் போஸ்டல் காலனியில் 72 மணி நேரமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளநீரால் அங்குள்ளவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், வெள்ளநீர் அவர்களுடைய வீடுகளை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மும்பை வானிலை ஆய்வு மையம் நாளை வியாழக்கிழமை வரை பலத்த மழை பெய்யும் என்று கணித்துள்ளது. இதனால், மேலும் நிலைமை சிக்கலாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications