அடுத்த 24 மணி நேரத்தில்... கேரளா, கர்நாடகா, ஆந்திரா கடலோரங்களில் கன மழைக்கு வாய்ப்பு!
டெல்லி: கடலோர கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை இலாகா கூறியுள்ளதாவது: மேற்கு வங்கம், சிக்கிம், பிகார் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளிலும், கோவா, ஆந்திராவின் கடலோரம், தெலங்கானா, கடலோர கர்நாடகா, உட்புர கர்நாடகா, கடலோர கேரளா மாநிலங்களில் மிக கனத்த மழையை எதிர்பார்க்கலாம்.

நாளை 26ம் தேதி, கிழக்கு உத்தரபிரதேசம், மேற்கு உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ஹரியானா, டெல்லி, மேற்கு மத்திய பிரதேசம், கொங்கன் கோவா ஆகிய மாநிலங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். இவ்வாறு வானிலை இலாகா அறிவித்துள்ளது.
27ம் தேதியான நாளை மறுநாள், உத்தராகண்ட்டின் ஒரு சில இடங்களிலும், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, சண்டீகர், டெல்லி, மேற்கு உத்தரபிரதேசம், மேற்கு மத்திய பிரதேசம் மற்றும் கொங்கன் கோவா பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேநேரம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை இருக்காது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications