கள்ளத்தொடர்பு வைத்தால் இனி ஆண்களுக்கு தண்டனை இல்லை- உச்சநீதிமன்றம் அதிரடி
Recommended Video

டெல்லி: கள்ளத்தொடர்பு வைத்திருந்தால் இனி ஆண்களுக்கு தண்டனை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
ஒரு ஆண் கள்ளக்காதலில் ஈடுபட்டால் அவருக்கு இந்திய தண்டனை சட்டம் 457-இன் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டால் அவருக்கு தண்டனை ஏதும் வழங்கப்படுவதில்லை.

ஆண், பெண் இருவரும் சமம் என்பதால் ஒன்று இருவருக்கும் சமமான தண்டனை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த சட்டத்தை நீக்கக வேண்டும் என்று கோரப்பட்ட வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளன.
இதில் வயது வந்த ஆண்- பெண் இடையேயான கள்ளத்தொடர்பு கிரிமினல் குற்றம் கிடையாது. கள்ள உறவில் ஈடுபட்டால் ஆணோ பெண்ணோ தங்கள் உறவுகளிடம் இருந்து விவாகரத்து கோரலாம்.
[497வது பிரிவு நீக்கம்.. யாருக்கு சாதகமானது.. ஆண்களுக்கா இல்லை பெண்களுக்கா?]
இந்த கள்ளத்தொடர்பால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில் அது குற்றமில்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். எனவே கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்களுக்கு இனி எவ்வித தண்டனையும் இல்லை.












Click it and Unblock the Notifications