மோடிக்கும் முன்னாடி ஒருத்தார் இந்த வேலையைச் செய்துள்ளார்!
பிரதமர் மோடிக்கு முன்பு 1978ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் ரூ. 100க்கு மேல் இருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த சம்பவத்தை நாடு பார்த்தது.
டெல்லி: பெரிய ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த 2வது பிரதமர் நரேந்திர மோடி. அவருக்கு முன்பு இதேபோன்ற அதிரடியைச் செய்த பிரதமர் மொரார்ஜி தேசாய்.
இருவருமே காங்கிரஸ் சம்பந்தப்படாத பிரதமர்கள் என்பது இதில் வித்தியாசமான ஒற்றுமையாகும். இந்திய வரலாற்றில் இதுவரை 2 முறை மட்டுமே பெரிய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்த முடிவுகளை அறிவித்த இரு பிரதமர்களுமே குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.

1978ல்
1978ம் ஆண்டு பிரதமராக இருந்த ஜனதாக் கட்சியின் மொரார்ஜி தேசாய் ரூ. 100க்கு மேல் இருந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.

கள்ள நோட்டு அட்டகாசம்
அப்போதும் கருப்புப் பணமும், கள்ள நோட்டுக்களும்தான் இந்த முடிவை எடுக்க தேசாயைத் தூண்டியது. தற்போதும் கூட அதே காரணத்திற்காகவே 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பிரதமர் மோடி ஒழித்துள்ளார்.

இங்கிலாந்து ஆட்சியின்போது
1938ம் ஆண்டு நாடு இங்கிலாந்து வசம் இருந்தபோது ரூ. 10,000 நோட்டை வெள்ளையர் அரசு அறிமுகப்படுத்தியது. அதன் புது வடிவம் பின்னர் 1954ல் வெளியானது. இதை பிறகு 1946 மற்றும் 1978ல் இந்திய அரசுகள் ஒழித்தன.

1000-5000-10,000
பின்னர் மொரார்ஜி தேசாய் பதவிக்கு வந்தபோது 1000, 5000, 10,000 ஆகிய ரூபாய் நோட்டுக்களை ஒழித்தார். அது அப்போது பெரும் பரபரப்பாக இருந்தது.

மீண்டு வந்த 500
பின்னர் 1987ல் 500 ரூபாய் நோட்டு மீண்டும் அறிமுகமானது. அதேபோல 2000மாவது ஆண்டு நவம்பர் மாதம் 1000 ரூபாய் நோட்டும் திரும்பி வந்தது.
தற்போது 500ம், 1000மும் திரும்பிப் போயுள்ளது.
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications