திடீர் ட்விஸ்ட்.. இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி.. பாஜகவுக்கு பெரியஅடி.. மாறிப்போன கருத்து கணிப்புகள்
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அங்கு கருத்து கணிப்புகளை தாண்டி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வென்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டி உள்ளது.
இந்த தேர்தலில் மாநிலத்தை ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தபால் ஓட்டில் பாஜக முன்னிலை
இந்த தேர்தலக்கான ஓட்டுப்பதிவு கடந்த மாதம் 12ம் தேதி 7,881 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 75.6 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இந்த இந்த ஓட்டுக்கள் இன்று 59 இடங்களில் உள்ள 68 ஓட்டுச்சாவடி மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்தது. தபால் ஓட்டுக்களை பொறுத்தமட்டில் பல தொகுதிகளில் பாஜகவினர் முன்னிலையில் இருந்தனர்.. இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் செராஜ் தொகுதியில் முன்னிலையில் இருந்தது.

மாறி மாறி முன்னிலை
இதன் தொடர்ச்சியாக ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றனர். அதன்படி காலை 9 மணி நிலவரப்படி இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. காங்கிரஸ் கட்சி மொத்தம் 28 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 23 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 5 இடங்களிலும் முன்னிலை பெற்றன. இமாச்சலில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் தொகுதிகளின் முன்னிலை நிலவரம் மாறிமாறி அமைந்தது. மாநிலத்தில் புதிய ஆட்சியை அமைப்பது பாஜகவா?, காங்கிரஸா? என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆட்சியை பிடித்த காங்கிரஸ்
இந்நிலையில் இன்று மாலையில் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வாகை சூடினர். இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 35 இடங்களில் வெற்றி கட்டாயமாகும். இதனால் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இமாச்சல பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது.

மாறிய கருத்து கணிப்புகள்
இமாச்சல பிரதேசத்தை பொறுத்தமட்டில் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் என்பது நிகழ்ந்து வருகிறது. இருப்பினும் இந்த முறை பாஜக 2வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும் என பாஜக தலைவர்கள் கூறினார். மேலும் இதனை தான் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் வெளிப்படுத்தின. இருப்பினும் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதன்மூலம் கருத்து கணிப்பு முடிவுகள் அப்படியே மாறிஉள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்












Click it and Unblock the Notifications