இந்தியை ஐ.நா. வின் அலுவல் மொழியாக்க முயற்சியா? சுஷ்மா சுவராஜ் விளக்கம்
உலகளவில் இந்தியை பிரபலமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தி மொழியை ஐக்கிய நாடுகளின் அலுவல் மொழிகளில் ஒன்றாக்க முயற்சித்து வருவதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழியை ஐ.நா. அலுவல் மொழியாக்குவது குறித்து உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், இந்தியை சர்வதேச மொழியாக பிரபலப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய தலைவர்கள் பலமுறை ஐநாவில் இந்தியில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 2008-ல் மொரீஷியஸில் உலக இந்தி தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டது.

உலகளவில் இந்தியை பிரபலமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் விளைவாக ஐ.நா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை கொண்டு வரவும் முயற்கள் நடந்து வருகிறது. இதன் விளைவாக, ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ இணையதள ரேடியோவில் இந்தியில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன இவ்வாறு சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications