வளர்ச்சி ரதத்தின் இரண்டு சக்கரங்கள் போன்றவர்கள் இந்துக்களும், முஸ்லீம்களும்...: மோடி
அகமதாபாத்: இந்துக்களும் முஸ்லீம்களும் நாட்டின் வளர்ச்சி ரதத்தின் இரண்டு சக்கரங்கள் போன்றவர்கள், எனவே, ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என நரேந்திர மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.
குஜராத் தலைநகரான அகமதாபாத்தில் முஸ்லீம்களின் மூன்று நாள் வணிக நிகழ்ச்சி ஒன்று தொடங்கியுள்ளது. இதில் நாட்டில் உள்ள 80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மேலும், இந்நிகழ்ச்சியில் துபாயில் இருந்தும் 10 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றது.
இந்த வர்த்தக கண்காட்சியை குஜராத் முதல்வரும், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து விழாவில் அவர் கூறியதாவது:-

இந்துக்களும் முஸ்லீம்களும் வளர்ச்சியின் இரண்டு சக்கரங்கள் போன்றவர்கள்.நாட்டில் நிலையான வளர்ச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவசியம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு எல்லோருடைய பங்களிப்பும் அவசியம்.வளர்ச்சியை வேகமாக கொண்டுவரவேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டில் 24 மணி நேர மின்சார வினியோகம் அவசியம்.கடந்த 20 ஆம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் வளர்ச்சியை காணமூடிகிறது.சிறிய விஷயங்களில் ஏற்படும் மாற்றம் பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
முஸ்லீம்கள் பெரிய தொழில்களை கொண்டுள்ளனர். அவர்கள் மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வந்துள்ளனர்.முஸ்லீம் இளைஞர்களும் பெண்களும் மிகப்பெரும் திறமையை கொண்டுள்ளனர்.ஆனால் அவர்களுக்கு பொருத்தமான தளம் வேண்டும்.வேலையை தேடுவதற்கு பதிலாக பிறருக்கு வேலை வாய்ப்பை வழங்க கூடிய நிலைக்கு வர வேண்டும்' என இவ்வாறு அவர் பேசினார்.
இந்த தொழில் கண்காட்சிக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை புரிவார்கள் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications