பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல்.. அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தகவல் சொன்ன ராஜ்நாத்சிங்
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப்பட்டன. சுமார் 40 தீவிரவாதிகளும், 9 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். யூரி தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடி இதுவாகும்.
இந்த நிலையில், பாகிஸ்தான் இந்தியாவுக்கு பதிலடி தருவோம் என கொக்கரித்து வருகிறது. எனவே நடைபெற்ற தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அனைத்து மாநில முதல்வர்களையும் போனில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், மேற்கு வங்கம், ஒடிஷா, பீகார் உள்ளிட்ட பல மாநில முதல்வர்களிடம் தகவல் தெரிவித்ததோடு, காங்கிரசின் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களிடமும் தகவல் தெரிவித்துள்ளார் ராஜ்நாத்சிங்.