சென்னைக்கு என்.எஸ்.ஜி. கமாண்டோ படை அனுப்பப்படும்: உள்துறை அமைச்சர் ஷிண்டே
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இரட்டை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சென்னைக்கு என்.எஸ்.ஜி. கமாண்டோ படை அனுப்பப்படும் என்று மத்திய உள்துறைஅ மைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, சென்னை குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து என்.எஸ்.ஜி. கமாண்டோ படை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
இதனிடையே ஹைதராபாத்தில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications