காஷ்மீருக்குள் ஊடுறுவ 200 தீவிரவாதிகள் காத்திருப்பதாக பரபரப்பு தகவல்..!
டெல்லி: காஷ்மீருக்குள் ஊடுறுவ 200 தீவிரவாதிகள் காத்திருப்பதாக உளவுப் பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து காஷ்மீர் முழுவதும் தீவிரக் கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பெரும் தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டுள்ளதாகவம், அதுதவிர நாடு முழுவதும் விமானப்படைத் தளங்களைத் தாக்கும் திட்டமும் தீவிரவாதிகளிடம் இருப்பதாகவும் உளவுத்துறை தகவல்கள் எச்சரித்துள்ளன.
இதையடுத்து நாடு முழுவதும் விமானப் படை தளங்கள், விமான நிலையங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

150 முதல் 200 பேர்
காஷ்மீரில் ஊடுருவலில் ஈடுபடுவதற்காக எல்லையில் 150 முதல் 200 தீவிரவாதிகள் வரை பாகிஸ்தான் பகுதியில் காத்திருப்பதாக எல்லைப் பாதுகாப்பு படை ஐ.ஜி. விகாஷ் சந்திரா தெரிவித்துள்ளார். எல்லைப் பாதுகாப்புபடையின் உளவுதுறை திரட்டிய தகவலின் அடிப்படையில் அவர் இதை தெரிவித்தார்.

நாச வேலைகளில் ஈடுபடத் திட்டம்
காஷ்மீர் பகுதியில் அமைதியின்மையையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தானும் தீவிரவாத அமைப்புகளும் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து நாச வேலைகளில் ஈடுபடுவதாக அவர் மேலும் தெரிவித்தார். தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஊடுருவலில் ஈடுபடுகிறார்கள்.

தீவிரவாதிகள்
இவ்வாறு ஊடுருவலில் ஈடுபட்ட பல தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் போலீசாருடன் மத்தியரிசர்வ் போலீஸ் படையினர், துணைராணுவப்படையினர் அங்கு விழிப்புணர்வுடனும், தியாக மனப்பான்மையுடனும் செயல்பட்டு அமைதியை நிலைநாட்டுகிறார்கள். ஒவ்வொரு படையினரும் நிலைமைக்கு ஏற்ப செயல்படுவதாக ஐ.ஜி. விகாஷ் சந்திரா தெரிவித்தார்.

விமானப்படைத் தளங்கள், விமான நிலைங்களில் உஷார் நிலை
இதற்கிடையே விமானப்படைத் தளங்கள் மற்றும் விமான நிலையங்களை தீவிரவாதிகள் தாக்க கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதிலும் உள்ள முக்கிய விமானப்படை நிலையங்கள் மற்றும் தளங்களுக்கான பாதுகாப்பையும், கண்காணிப்பையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
|
பாதுகாப்பு அதிகரிப்பு
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த விமானப்படை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உளவுத்துறையின் எச்சரிக்கை மிகவும் பொதுவானதுதான். ஆனாலும் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து விமானப்படை நிறுவனங்கள் மற்றும் தளங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications