சிலைகளை உடைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை... மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
நாட்டின் சில பகுதிகளில் சிலை உடைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மாநில அரசுகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

டெல்லி : நாட்டின் சில பகுதிகளில் சிலை உடைப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மாநில அரசுகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில் நாட்டின் சில பகுதிகளில் சிலைகள் அகற்றப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. சிலை உடைப்பு சம்பவங்களை உள்துறை அமைச்சகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது, எனவே உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கைகளுக்கு பகிரங்க எதிர்ப்பை தெரிவிக்கிறது.
Home Ministry asks States to take all necessary measures to prevent vandalism, toppling of statues; PM Modi also spoke to HM in this regard #Periyar #Lenin pic.twitter.com/4yLuK6pgAC
— Arvind Gunasekar (@arvindgunasekar) March 7, 2018
மாநில அரசுகள் சிலை உடைப்பு சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை எஎடுக்க வேண்டும். சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சிலைகள் உடைப்பு விவகாரம் குறித்து பிரதமர் அதிருப்தி தெரிவித்ததோடு இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications