'ஹனிமூன்' கருத்து- ராம்தேவுக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை
டெல்லி: தலித்துகள் வீடுகளுக்கு ராகுல்காந்தி செல்வது ஹனிமூனுக்காகத்தான் என்று யோகா குரு ராம்தேவ் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாடு முழுவதும் பல காவல் நிலையங்களில் அவருக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட கூடாது என்று ராம்தேவ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு, ராம்தேவுக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் நாங்கள் எந்த கருத்தையும் கூறவில்லை, விசாரணைக்குத்தான் இடைக்கால தடை விதிக்கிறோம் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், ராம்தேவ் மீது வழக்குப் பதிவாகியுள்ள மாநிலங்களின் காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை நோட்டீஸ் வாயிலாகவும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications