காதல் திருமணம் செய்த மகளை ஆத்திரத்தில் சுட்டுக் கொன்ற தந்தை
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 22 வயது மகளை தந்தை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள பனியாதர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் சந்திரா. அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது 22 வயது மகளை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். அந்த பெண் தனது தந்தையின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டவர். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே இது கௌரவக் கொலையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராம் சந்திராவை கைது செய்தனர்.
பெற்ற மகளை தந்தையே சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications