இடதுசாரி சிந்தனையாளர்கள் கைது.. சிறப்பு விசாரணை குழு அமைக்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
Recommended Video

டெல்லி: இடதுசாரி சிந்தனையாளர்கள் வீட்டுக்காவலை மேலும் 4 வாரங்கள் நீட்டிப்பு செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக, இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான, வரவர ராவ், மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். உபா சட்டம் இவர்கள் மீது பாய்ந்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலையீட்டால், அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்ட நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ரோமிலா தாப்பர் உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் கோரப்பட்டது.
ஆனால் இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, செயற்பாட்டாளர்களுக்கு மேலும் 4 வாரங்கள் வீட்டுக்காவலை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதேநேரம் 3 நீதிபதிகள் அமர்வில் இருந்த, நீதிபதி சந்திரசூட் மட்டும் தனது ஆட்சேபனையை பதிவு செய்தார்.
[வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு.. சபரிமலையில் அனைத்துப் பெண்களும் வழிபட சுப்ரீம்கோர்ட் அனுமதி! ]
காவல்துறை இந்த வழக்கில் வேண்டுமென்றே ஆவணங்களை ரிலீஸ் செய்து மீடியா டிரையல் நடத்த உதவி செய்கிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.
ஆனால் தலைமை நீதிபதியோ, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தங்களுக்கு எந்த மாதிரி விசாரணை வேண்டும் என்று கேட்பது சரியில்லை. எதிர் கருத்து கொண்டவர்கள் என்பதற்காக மட்டுமே இவர்கள் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது என்று கூறினார்.
இதனிடையே 5 பேர் விவகாரத்தில்
சிறப்பு விசாரணை குழு அமைக்க மறுத்துள்ள உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications