வீடுகள் விலை உயர்வால் இந்த சீசனில் விற்பனை மந்தமாகும்- ஜேஎல்எல் நிறுவனம் ஆய்வறிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்த வருட பண்டிகை சீசனில் இந்தியாவில் வீடுகள் விற்பனை மந்தமாகவே இருக்கும் என ஜேஎல்எல் இந்தியா நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு பண்டிகை சீசனிலும் வீடுகள் விற்பனை 25 முதல் 30 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் ஆனால் இந்த முறை 15 முதல் 20 சதவிகித வளர்ச்சியை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் அதன் ஆய்வு தெரிவித்துள்ளது.

வீடுகளின் விலை அதிகரித்திருப்பதுதான் விற்பனை குறைய காரணமாக இருக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ரியல் எஸ்டேட் மார்க்கெட்டும் பெருமளவில் இந்த வருடம் அடிவாங்கியுள்ளதாலும் வீடுகள் விற்பனை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு விற்பனை அதிகரிக்க வரிகளை அரசு குறைக்க வேண்டும் என்றும் ஒப்புதல் தருவதில் தேவையற்ற தாமதங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications