பலத்த பாதுகாப்பு இருந்தும் கசிந்த ஆதார் தகவல்கள்... இதை மத்திய அரசு எப்படி சரி செய்ய போகிறது?
டெல்லி: பலத்த பாதுகாப்புகள் இருந்தும் ஆதார் தகவல்கள் திருடப்பட்டு வரும் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் இதை மத்திய அரசு எப்படி சரி செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆதார் அட்டைகள் கட்டாயமா, இல்லையா என்பது குறித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஆதார் கட்டாயம் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அப்போது தனிநபரின் தகவல்களை பாதுகாப்பது உள்ளிட்ட சிறு சிறு மாற்றங்களை செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
[200 கேமராக்கள்.. 150 சிஆர்பிஎப் வீரர்கள்.. ஆதார் தகவல்கள் எங்கே பாதுகாக்கப்படுகிறது தெரியுமா?]
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த வழக்கு விசாரணையின்போது ஆதார் தகவல்கள் கசிவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். அப்போது ஆதார் தகவல்கள் ஹரியாணா மாநிலத்தில் 13 அடி உயர சுற்றுச்சுவர் கொண்ட கட்டடத்தில் பாதுகாக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

பகிரங்கம்
ஆதார் தகவல்களை திருட முடியாது என்று கூறிய டிராய் தலைவர் ஆர் எஸ் சர்மா தனது ஆதார் எண்ணை வெளியிட்டார். அப்போது முடிந்தால் என்னுடைய தகவல்களை வெளியிடுங்கள் பார்ப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தார்.

ஆப்பிள் ஐபோன்
இவர் சவால் விடுத்த அடுத்த நாளே சர்மாவின் பான் எண், மாற்று போன் எண், ஈமெயில் ஐடி, அவர் பயன்படுத்தும் போனின் வாட்ஸ் ஆப் படம் ஆகியவற்றை ஹேக்கர்கள் வெளியிட்டனர். இன்னொரு ஹேக்கர் சர்மா பயன்படுத்தும் ஆப்பிள் ஐபோனின் எண்ணை வெளியிட்டார்.

ஹரியாணாவில்
சர்மா தனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லை என்ற தகவலையும் ஹேக்கர்கள் தெரிவித்தனர். இது போல் ரூ. 500 கொடுத்தால் 10 நிமிடத்தில் ஆதார் தகவல்கள் கிடைப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் பெறப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட ஆதார் எண் கொண்டவருடையதுதான் என்பதை ஹரியாணாவில் ஆதார் தகவல்கள் பாதுகாப்பு நிறுவனமும் தெரிவித்தது.

மத்திய அரசு என்ன செய்ய போகிறது
இது போன்று ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆதார் தகவல்களை பாதுகாப்பது குறித்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. எனவே ஆதார் தகவல்கள் திருடப்படாமல் இருக்க மத்திய அரசு என்ன செய்ய போகிறது.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications