பலத்த பாதுகாப்பு இருந்தும் கசிந்த ஆதார் தகவல்கள்... இதை மத்திய அரசு எப்படி சரி செய்ய போகிறது?
டெல்லி: பலத்த பாதுகாப்புகள் இருந்தும் ஆதார் தகவல்கள் திருடப்பட்டு வரும் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் இதை மத்திய அரசு எப்படி சரி செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆதார் அட்டைகள் கட்டாயமா, இல்லையா என்பது குறித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஆதார் கட்டாயம் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அப்போது தனிநபரின் தகவல்களை பாதுகாப்பது உள்ளிட்ட சிறு சிறு மாற்றங்களை செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
[200 கேமராக்கள்.. 150 சிஆர்பிஎப் வீரர்கள்.. ஆதார் தகவல்கள் எங்கே பாதுகாக்கப்படுகிறது தெரியுமா?]
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த வழக்கு விசாரணையின்போது ஆதார் தகவல்கள் கசிவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். அப்போது ஆதார் தகவல்கள் ஹரியாணா மாநிலத்தில் 13 அடி உயர சுற்றுச்சுவர் கொண்ட கட்டடத்தில் பாதுகாக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

பகிரங்கம்
ஆதார் தகவல்களை திருட முடியாது என்று கூறிய டிராய் தலைவர் ஆர் எஸ் சர்மா தனது ஆதார் எண்ணை வெளியிட்டார். அப்போது முடிந்தால் என்னுடைய தகவல்களை வெளியிடுங்கள் பார்ப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தார்.

ஆப்பிள் ஐபோன்
இவர் சவால் விடுத்த அடுத்த நாளே சர்மாவின் பான் எண், மாற்று போன் எண், ஈமெயில் ஐடி, அவர் பயன்படுத்தும் போனின் வாட்ஸ் ஆப் படம் ஆகியவற்றை ஹேக்கர்கள் வெளியிட்டனர். இன்னொரு ஹேக்கர் சர்மா பயன்படுத்தும் ஆப்பிள் ஐபோனின் எண்ணை வெளியிட்டார்.

ஹரியாணாவில்
சர்மா தனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லை என்ற தகவலையும் ஹேக்கர்கள் தெரிவித்தனர். இது போல் ரூ. 500 கொடுத்தால் 10 நிமிடத்தில் ஆதார் தகவல்கள் கிடைப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் பெறப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட ஆதார் எண் கொண்டவருடையதுதான் என்பதை ஹரியாணாவில் ஆதார் தகவல்கள் பாதுகாப்பு நிறுவனமும் தெரிவித்தது.

மத்திய அரசு என்ன செய்ய போகிறது
இது போன்று ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆதார் தகவல்களை பாதுகாப்பது குறித்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. எனவே ஆதார் தகவல்கள் திருடப்படாமல் இருக்க மத்திய அரசு என்ன செய்ய போகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications