500+ மரணங்களுக்கு காரணமான.. ஒற்றை தீவிரவாதி ஹபீஸ் சயீத்! நேற்றும் இவர்தான் அட்டாக்? யார் இந்த ஹபீஸ்!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பின் ஹபீஸ் சயீத் தொடர்புடைய தீவிரவாத இயக்கம் இருக்கிறது. ஹபீஸ் சயீத் என்ற இந்த ஒற்றை தீவிரவாதி இந்தியாவில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துவிட்டார்.

ஜம்மு காஷ்மீரில் நேற்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்திய வரலாற்றில் மிக மோசமான தாக்குதலில்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. மும்பை தாக்குதலுக்கு பின்பாக நேரடியாக பொதுமக்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா அதிகரித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் கடுமையான விவாதங்களை .. மக்கள் இடையே அச்சங்களை ஏற்படுத்தி உள்ளது.

Jammu Kashmir

பொறுப்பேற்பு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு வழியாக சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் வழிமறித்து மிக கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. முக்கியமாக ஒவ்வொருவரையும் சுடும் முன் அவர்கள் இந்துக்களா என்பதை உறுதி செய்ய கீழாடையை உருவி பார்த்துவிட்டு சுட்டுக்கொன்றுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலில் 4 முதல் 6 பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஹபீஸ் சயீத் தொடர்புடைய இயக்கம்தான் தாக்குதலை செய்துள்ளது.. இந்த ஒற்றை தீவிரவாதி இந்தியாவில் நடந்த பல தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்துவிட்டார். இவர் சார்பாக இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களை இங்கே பார்க்கலாம்.


1. 2008 மும்பை தாக்குதல்கள் (26/11)

தேதி: நவம்பர் 26-29, 2008

இடம்: மும்பை, மகாராஷ்டிரா

உயிரிழப்புகள்: 170க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

விவரங்கள்:

மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல், ஓபராய் ட்ரைடென்ட், சிஎஸ்டி ரயில் நிலையம், லியோபோல்ட் கஃபே மற்றும் சாபாத் ஹவுஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களை 10 லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்கினர். ஹபீஸ் சயீத் இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள கருத்தியல் மூளையாகக் கருதப்படுகிறார், இருப்பினும் அவர் நேரடியான ஈடுபாட்டை மறுத்தார். சயீத் உட்பட லஷ்கர் மற்றும் அதன் தலைமையை இணைக்கும் வலுவான ஆதாரங்களை இந்தியாவும் சர்வதேச நிறுவனங்களும் விசாரணையில் பின்னர் கண்டறிந்தன.

Jammu Kashmir

2. 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்புகள்

தேதி: ஜூலை 11, 2006

இடம்: மும்பை புறநகர் ரயில்வே நெட்வொர்க்

உயிரிழப்புகள்: 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

விவரங்கள்:

பீக் ஹவர்ஸில் ஏழு ரயில்களில் ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்ட. இந்திய அரசாங்கம் லஷ்கர் அமைப்பின் ஈடுபாட்டை சந்தேகித்தாலும், இந்தியன் முஜாஹிதீன் உட்பட பல குழுக்களும் இதில் குற்றம் சாட்டப்பட்டன. லஷ்கர்தான் பின்னர் இதற்கு பின் இருக்கலாம் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. அப்போது சயீத் மீண்டும் விசாரணை வளையத்திற்குள் வந்தார்.

3. 2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல்

தேதி: டிசம்பர் 13, 2001

இடம்: இந்திய நாடாளுமன்றம், புது தில்லி

பலி: 9 பேர் பலி, பலர் காயம்

விவரங்கள்:

ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய இரண்டும் குற்றம் சாட்டப்பட்டாலும், ஹபீஸ் சயீத்தின் சித்தாந்தத் தலைமையின் கீழ், லஷ்கர்-இ-தொய்பா தாக்குதலை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கிட்டத்தட்ட போரைத் தூண்டியது.

சயீத் மேற்கொண்ட மற்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் (மறைமுக அல்லது சந்தேகத்திற்குரிய தாக்குதல்கள்):

கார்கில் மோதல் (1999): பயங்கரவாதத் தாக்குதலாக இல்லாவிட்டாலும், மோதலில் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் போராளிகளுக்கு உதவுவதில் லஷ்கர் தீவிரமாக செயல்பட்டது. அதில் ஹபீஸ் சயீத் பங்கு முக்கியமானது. ஜம்மு & காஷ்மீரில் பல்வேறு ஊடுருவல் முயற்சிகள் மற்றும் தாக்குதல்கள்: சயீத்தின் சித்தாந்த வழிகாட்டுதலின் கீழ் எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல்கள் சிறிதும் பெரிதுமாக எல்லையில் நடந்து வருகின்றன.

J&K இல் இராணுவ முகாம்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் (2000s-2010s): பல தாக்குதல்களுக்கு லஸ்கர் அமைப்புதான் காரணம். இதில் ஹபீஸ் சயீத் பங்கு முக்கியமானது. இப்படி இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட மரணங்களுக்கு இவர் காரணம் ஆகிவிட்டார். ஏற்கனவே ஹபீஸ் சயீத் ஐநா, அமெரிக்கா மற்றும் இந்தியாவால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பற்றி தகவல் தருபவர்களுக்கு அமெரிக்கா $10 மில்லியன் பரிசு வழங்கும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+