மாறும் இந்தியா! இனி இந்துக்களுக்கே முன்னுரிமை.. ராமர் கோவில் விழா! சர்வதேச மீடியாக்கள் சொன்னது என்ன?
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது பற்றி சர்வதேச ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிகழ்வு தொடர்பாக வெவ்வேறு வகைகளில் சர்வதேச ஊடகங்கள் கவரேஜ் செய்துள்ளன.
அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்று வருகிறது. இன்று கோவில் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி , உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் முன்னிலையில் நடைபெற்றது. இவர்கள் முன்னிலையில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.

சர்வதேச ஊடகங்கள்: இந்த நிகழ்வை சர்வதேச ஊடகங்கள் வெவ்வேரு வகைகளில் கவர் செய்துள்ளன. உதாரணமாக நியூயார்க் டைம்ஸ் நிறுவனம்.. மோடி ஒரு மாபெரும் கோவிலை திறந்து வைத்துள்ளார்... இது இனி இந்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவை உருவாக்குவதை நோக்கிய வெற்றி பயணம் என்று குறிப்பிட்டு உள்ளது.
அதில், இஸ்லாமியர்களின் பழமையான மசூதிக்கு இடிக்கப்பட்ட தளம் ஒன்றில் இந்த மசூதி கட்டப்பட்டு உள்ளது என்று இந்த கட்டுரையின் முன்னுரை தெரிவித்துள்ளது.

இன்னொரு நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் ராமர் கோவில் ஏன் முக்கியம் என்று குறிப்பிட்டு உள்ளனர். அதில், இந்துத்துவாவின் அரசியல் வெற்றியை, மத ரீதியான வெற்றியை பறைசாற்றும் விதமாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பல ஆண்டு கால வாக்குறுதியை தனது கோவில் திறப்பு விழாவின் மூலம் நிறைவேற்றினார், இது அவரது இந்து தேசியவாத அடித்தளத்தை பலப்படுத்தும். இந்துக்களின் வாட்டிகன் என்று அழைக்கப்படும் கோவில் ஆகும் இது. ஆனால் இது ஒரு வன்முறையான கடந்த காலத்தின் நினைவுகளையும் கொண்டது.

என்ன சொல்கின்றன?: எடிஷன் என்ற சர்வதேச ஆங்கில ஊடகம், இந்துக்களின் தேசிய கோவில் இது என்று ஆதித்யநாத் குறிப்பிட்டதை முன்னிருந்து செய்தி வெளியிட்டு உள்ளது. அந்த கோவில் கட்டப்பட்ட வரலாறு, பின்னணி யை வர்ணித்து உள்ளது.
DW ஊடகம் வெளியிட்ட செய்தியில், இந்துத்துவாவின் வெற்றியை பறைசாற்றும் விதமாக பிரதமர் மோடி இந்த கோவிலை திறந்து வைத்துள்ளார். மசூதி இருந்த இடத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது என்றும்.. அங்கே முன்னர் கோவில் இருந்து இடிக்கப்பட்டதாக ஒரு சாரார் நம்புவதையும் விரிவாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவிலைத் திறந்து வைத்தார், இது அவரது இந்து தேசியவாத அரசியலின் வெற்றியை குறிக்கிறது. இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் அதிகாரப்பூர்வமற்ற பிரச்சாரத்தை அவர் தொடங்கி வைத்துள்ளார் என்று டான் DAWN ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
கோவில்: இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

திறப்பு விழா: ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications