வலைவீசிய லக்னோ.. குஜராத் அணியின் கேப்டனானது எப்படி? நெஹ்ரா மட்டும் இல்லைனா? உருகிய ஹர்திக் பாண்ட்யா
அகமதாபாத்: ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் சேர அழைப்பு வந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா எப்படி குஜராத் அணியில் இணைந்தார் என்பதும், அந்த அணியின் கேப்டன் வாய்ப்பை அவர் பெற்றது எப்படி? என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதில் ஆசிஷ் நெஹ்ரா தான் 100 சதவீதம் பங்கு வகித்த விபரம் தற்போது ஹர்திக் பாண்ட்யாவால் கசிந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணிக்கு கேஎல் ராகுலும் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டனர்.

துவக்க சீசனிலேயே ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ராகுலின் லக்னோ அணி 3வது இடம் பிடித்தது. இந்நிலையில் நடப்பு சீசனில் பிற டீம்களை போல் குஜராத், லக்னோ அணிகளும் சாம்பியன் பட்டத்தை குறிவைத்து களமிறங்கி உள்ளன.
நடப்பு சீசனில் லக்னோ, குஜராத் அணிகள் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன. இந்நிலையில் தான் ஹர்திக் பாண்ட்யா தற்போது குஜராத் அணிக்கான இன்டர்வியூவில் தனது ஐபிஎல் பயணம் குறித்த முக்கிய விபரங்களை பகிர்ந்துள்ளார். அப்போது தான் லக்னோ அணி தன்னை வாங்க விரும்பி போன் செய்து பேசியதை அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:
ஐபிஎல்லில் புதிய அணிகள் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் இருந்து எனக்கு போன்கால் வந்தது. எனக்கு நன்கு தெரிந்த ஒருவர் (கே.எல். ராகுல்) அணியை வழிநடத்தும் நிலையில் அணியில் சேர அழைத்தனர். என்னை பொறுத்தவரை அது முக்கியமானதாக இருந்தது. ஏனென்றால் நம்மை நன்கு புரிந்து கொண்டவருடன் சேர்ந்து விளையாடுவதை நானும் விரும்பினேன்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் ஆசிஷ் நெஹ்ரா என்னை அழைத்தார். அப்போது குஜராத் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட உள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் இது உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறினார். ஆசிஷ் நெஹ்ராவால் தான் குஜராத் அணிக்கு வந்தேன். என்னுடன் வேலை செய்வது எளிமையானது. என்னை அறிந்த ஒருவருக்கு, நான் என்னவென்று தெரியும். நெஹ்ரா என்னை பற்றி அறிந்து வைத்திருப்பவர்.
மேலும் அந்த காலக்கட்டத்தில் நான் நீண்டநாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்தேன். இதனால் எனக்கும் ஒரு கம்பேக் தேவைப்பட்டது. நாங்கள் இருவரும் செல்போனில் பேசி முடித்த சில நிமிடங்களில் நெஹ்ரா குறுஞ்செய்தி அனுப்பினார். அதில், நீங்கள் தயாராக இருந்தால் கேப்டன் பதவியை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்து இருந்தார்.

இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அதனை எதிர்பார்க்கவில்லை. நான் எதற்கும் பின்னாலும் ஓடிய நபராக இருந்ததில்லை. அப்படியாக தானாக இந்த பதவி வந்ததோடு குஜராத்தில் இணைந்தேன்'' என தெரிவித்துள்ளார். ஆசிஷ் நெஹ்ரா தற்போது ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications