4 தண்டவாளங்கள், 3 ரயில்கள்! வெறும் சில நிமிடங்களில் நடந்த கோரம்! ஒடிஸா ரயில் விபத்து நடந்தது எப்படி?
புவனேஸ்வரம்: ஒடிஸாவில் ரயில் விபத்தில் சிக்கி 261 பர் பலியான சம்பவம் நிகழ்ந்த போது ரயில்கள் வேகமாக வந்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் இதுவரை 261 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 900 பேர் காயமடைந்தனர். இந்த மீட்பு பணிகள் மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாலசோர் அருகே கோரமண்டல் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் போது அது தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. அப்போது சில பெட்டிகள் வேறு தண்டவாளத்தில் இருந்த சரக்கு ரயில் மீது மோதியது. அந்த சரக்கு ரயில் யஷ்வந்த்பூர்- ஹவுரா சூப்பர் பாஸ்ட் மீது மோதியதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் தண்டவாளம் தடம்புரண்டது.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. அது போல் பெட்டிகளில் நிறைய பேர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இரு பயணிகள் ரயில்களும் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த போது வேறு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இந்த கோரமான விபத்து நடந்தபோது பலர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் யஷ்வந்த்பூர் சூப்பர் பாஸ்ட்டும் வேகமாக சென்று கொண்டிருந்தன. இந்த சம்பவம் நேற்று 6.50 மணி முதல் 7.10 மணிக்குள் நடந்திருக்கும். காயமடைந்தவர்கள், விபத்தில் இறந்தவர்கள் குறித்து தகவலறிய உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் 4 தண்டவாளங்களில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதற்கு தண்டவாளங்களை சரியாக பராமரிக்காததே காரணம் என சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் பலரது இதயம் வெளியே வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அது போல் நெஞ்சு கூடு உடைந்து ரத்தம் வெளியே வந்ததாகவும் தெரிகிறது. இந்த கோர விபத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் கூறும் தகவல்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications