4 தண்டவாளங்கள், 3 ரயில்கள்! வெறும் சில நிமிடங்களில் நடந்த கோரம்! ஒடிஸா ரயில் விபத்து நடந்தது எப்படி?
புவனேஸ்வரம்: ஒடிஸாவில் ரயில் விபத்தில் சிக்கி 261 பர் பலியான சம்பவம் நிகழ்ந்த போது ரயில்கள் வேகமாக வந்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் இதுவரை 261 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 900 பேர் காயமடைந்தனர். இந்த மீட்பு பணிகள் மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாலசோர் அருகே கோரமண்டல் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் போது அது தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. அப்போது சில பெட்டிகள் வேறு தண்டவாளத்தில் இருந்த சரக்கு ரயில் மீது மோதியது. அந்த சரக்கு ரயில் யஷ்வந்த்பூர்- ஹவுரா சூப்பர் பாஸ்ட் மீது மோதியதில் எக்ஸ்பிரஸ் ரயிலின் தண்டவாளம் தடம்புரண்டது.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. அது போல் பெட்டிகளில் நிறைய பேர் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது. இரு பயணிகள் ரயில்களும் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த போது வேறு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இந்த கோரமான விபத்து நடந்தபோது பலர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் யஷ்வந்த்பூர் சூப்பர் பாஸ்ட்டும் வேகமாக சென்று கொண்டிருந்தன. இந்த சம்பவம் நேற்று 6.50 மணி முதல் 7.10 மணிக்குள் நடந்திருக்கும். காயமடைந்தவர்கள், விபத்தில் இறந்தவர்கள் குறித்து தகவலறிய உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் 4 தண்டவாளங்களில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதற்கு தண்டவாளங்களை சரியாக பராமரிக்காததே காரணம் என சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் பலரது இதயம் வெளியே வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அது போல் நெஞ்சு கூடு உடைந்து ரத்தம் வெளியே வந்ததாகவும் தெரிகிறது. இந்த கோர விபத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் கூறும் தகவல்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications