தாலிபான்கள் மீது அமெரிக்காவுக்கு ஏன் இந்த அக்கறை? உலகத்தில் யாருக்குமில்லாத அக்கறை?
டெல்லி: தாலிபான்களை பார்த்து ஆயுதம் ஏந்திய போராளிகள் என்று மென்மையாக அமெரிக்கா பேசியதை பார்த்து பிற உலக நாடுகளுக்கு வேண்டுமானால் ஷாக் ஆகியிருக்கலாம், ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் அசரவில்லை. காரணம், அமெரிக்காவின் வியூகத்தை பற்றி இந்திய உளவு அமைப்பினர் கையில் புள்ளி விவரத்தை வைத்துள்ளனர்.
வெள்ளை மாளிகையின் ஊடக துணைச் செயலாளர் எரிக சூல்ட்ஸ் அளித்த பேட்டியில்தான், தாலிபான்கள் தீவிரவாதிகள் இல்லை என்று கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்யாத குறையாக வாய் மலர்ந்தார். இதன் பின்னணி விஷயம் இதுதான்:

இருவேறு தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் இருவேறு தாலிபான்கள் ஆதிக்கம் உள்ளது. ஒன்று முல்லா உமர் தலைமையிலான தாலிபான்கள். இவர்கள் பாகிஸ்தானையும், அதன் நட்பு நாடுகளையும் மட்டும் தாக்க மாட்டார்கள். எனவே பாகிஸ்தானால், நல்ல தானிபான்கள் என்று புகழப்படுபவர்கள். மற்றொரு தாலிபான்கள் தெரிக் இ தாலிபான்கள். இவர்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து கொண்டு செயல்படுபவர்கள்.

பெஷாவர் தாக்குதல்காரர்கள்
பெஷாவரில் பள்ளி குழந்தைகளை கொலை செய்தது தெரிக் தாலிபான்கள்தான். எனவே, தெரிக் தாலிபான்களை இந்திய உளவு அமைப்பான ரா கட்டுப்படுத்தி வைத்துள்ளதாக பாகிஸ்தான் அவ்வப்போது கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடும்.

பாதுகாப்பு கேடயம்
ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளுக்கும், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது முல்லா உமர் தலைமையிலான தாலிபான்கள் என்ற தகவல் பலருக்கும் புதிதாகவே இருக்கும். ஆனால் அது உண்மை என்கின்றனர் இந்திய உளவு துறை அதிகாரிகள். இதற்காக தாலிபான்களுக்கு அமெரிக்கா ஏகப்பட்ட பணத்தை கொட்டிக் கொடுக்கிறதாம்.

பண பரிமாற்றம்
ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கத்தை ஆப்கானிஸ்தான் மண்டலத்தில் ஏற்படவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்கா இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. இதற்காக சிஐஏ அமைப்பின் முந்னாள் அதிகாரி ஒருவரையும் ஆப்கனில் பணியமர்த்தியுள்ள அமெரிக்கா அவர் மூலமாக தாலிபான்களுக்கு பணம் சப்ளை செய்கிறதாம்.

அமெரிக்கா வக்காலத்து
இந்த நிதி அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் இருந்து வெளியே செல்வதால்தான், திடீரென அமெரிக்கா, தாலிபான்களுக்கு வக்காலத்து வாங்கி அமெரிக்கர்களை திருப்திப்படுத்தியுள்ளது என்கின்றனர் இந்திய உளவுத்துறை அதிகாரிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications