ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரயில்கள்.. ஆந்திராவில் பயங்கர ரயில் விபத்து நடந்தது எப்படி? நெஞ்சே பதறுதே
அமராவதி: ஆந்திராவில் இன்று இரவு ஒரே தண்டவாளத்தில் சென்ற விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மற்றும் பாலசா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிக்கொண்டன. இதில் மொத்தம் 6 பேர் பலியாகி உள்ள நிலையில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ஒரே தண்டவாளத்தில் எப்படி 2 ரயில்கள் வந்தன. விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவில் உள்ள ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசா நோக்கி சென்ற ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் விபத்தில் சிக்கின.

அதாவது அந்த மாவட்டத்தின் கண்டகப்பள்ளி கிராமத்தின் வழியே செல்லும் தண்டவாளத்தில் இந்த 2 ரயில்களும் மோதிக்கொண்டன. இதில் ரயில்களின் பெட்டிகள் தடம் புரண்டன. மொத்தம் 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ள நிலையில் அதில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர்.
இதையடுத்து அங்கிருந்த பயணிகள் மற்றும் ரயில்வே போலீசார் உடனடியாக மீட்பு பணியை தொடங்கினர். மேலும் ரயில்வே போலீசார், ரயில்வே அதிகாரிகள், தீயணைப்பு வீரர்களுக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கினர்.
அப்போது தடம் புரண்ட பெட்டியில் காயமடைந்து இருந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சில பயணிகள் படுகாயம் அடைந்து இருந்தனர். முதலில் 3 பயணிகள் பலியாகி இருந்த நிலையில் 9.15 மணியளவில் மேலும் 3 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை என்பது 6 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் விபத்து எப்படி நடந்தது? ஒரே நேரத்தில் 2 ரயில்கள் எப்படி தண்டவாளத்தில் வந்தன? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி புறப்பட்டு சென்ற ரயில் கந்தகப்பள்ளி கிராமத்தின் அருகே சென்றபோது திடீரென்று பிரேக்கில் பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த ரயில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வேளையில் அந்த தண்டவாளத்தில் பாலசா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த பாலசா எக்ஸ்பிரஸ் நின்ற விசாகப்பட்டினம்-ராயகடா ரயிலின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் தற்போது வரை 6 பேர் பலியாகி உள்ளனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications