20 தமிழர்கள் கொல்லப்பட்டது சட்டவிரோதமானது: தேசிய மனித உரிமை கமிஷன்
ஹைதராபாத்: 20 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொலை செய்தது சட்டவிரோதமானது என தேசிய மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை அம்மாநில போலீசார் சுட்டுக் கொலை செய்தனர். இந்த சம்பவத்தை தேசிய மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து என்கவுன்ட்டரில் இருந்து தப்பிய 2 பேர் கடந்த 13ம் தேதி டெல்லியில் தேசிய மனித உரிமை கமிஷன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து மேலும் ஒருவர் கடந்த 15ம் தேதி புதுச்சேரியில் வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில் தமிழர்கள் படுகொலை குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை கமிஷன் குழுவினர் நேற்று ஹைதராபாத் வந்து தங்களின் விசாரணையை துவங்கினர். 20 பேர் படுகொலை குறித்து நீதி விசாரணைக்கு ஏன் உத்தரவிடவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தமிழர்கள் கொல்லப்பட்டது சட்டவிரோதமானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் கூறுகையில்,
3 பேர் அளித்த வாக்குமூலத்தில் இருந்து 20 பேர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அதில் 11 பேர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதுடன் கொடுமைபடுத்தப்பட்டுள்ளனர். இத்தனையும் ஆந்திர முதல்வரின் ஒப்புதலோடு நடந்துள்ளது என்றார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications