டெல்லியில் ஆட்டம், பாட்டத்துடன் வண்ணமயமாக நடந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி
டெல்லி: டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பாட்டு பாடி, நடனமாடினர்.
ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒன்று சேர உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை ஓரினச்சேர்க்கையாளர்கள் மாபெரும் பேரணியை நடத்தினார்கள். பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் பல வண்ணங்களில் பலூன்களை வைத்திருந்தனர். முகத்தில் முகமூடி அணிந்தும், தலையில் வண்ணமயமான விக்குகள் அணிந்தும் சென்றனர். அவர்கள் பாட்டு பாடிக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் சென்றனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கோஷமிட்டனர். மேலும் நான் ஓரினச்சேர்க்கையாளன், அது பரவாயில்லை என்று எழுதப்பட்ட பேனர்களை ஏந்திச் சென்றனர்.

ஓரினிச்சேர்க்கையாளர்கள் உறவு கொள்வது தவறு இல்லை என்று 2009ம் ஆண்டில் நீதிமன்றம் ஒன்று அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் ரத்து செய்தது. இயற்கைக்கு புறம்பான முறையில் உறவு கொள்வதற்கு தடை விதித்துள்ள குற்றவியல் சட்டம் 377-ஐ நாடாளுமன்றம் தான் வாபஸ் பெற முடியும், நீதிமன்றம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த சட்டத்தை மோடி அரசு வாபஸ் பெறாது என்று பேரணியில் கலந்து கொண்ட பலர் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications