பிரிவினைவாத இயக்க தலைவர் மசாரத் ஆலம் உட்பட அரசியல் கைதிகளை விடுவித்தது காஷ்மீர் அரசு!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சிறையில் இருந்து பிரிவினைவாத இயக்க தலைவர் மசாரத் ஆலம் உட்பட அரசியல் கைதிகள் பலரையும் விடுதலை செய்ய ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் சிறைகளில் இருக்கும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அம்மாநில முதல்வர் முப்தி முகமது சயீத் உத்தரவிட்டு உள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்த பிரிவினைவாத இயக்க தலைவர்களில் ஒருவரான 44 வயதான மசாரத் ஆலமும் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்கும் போராட்டத்தை தூண்டி விட்டதாக மசாரத் ஆலமை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். அவரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர்.
இந்த நிலையில், 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் கைது செய்யப்பட்டு பாரமுல்லா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முப்தி முகமது சயீத் பிறப்பித்த உத்தரவால் நேற்று மசாரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டார்.
மசாரத் ஆலத்தை விடுதலை செய்ததற்கு பாரதிய ஜனதா கட்சிகடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பாரதிய ஜனதா சார்பில் போராட்டமும் நடைபெற்றது. இதுபற்றி காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா இளைஞர் அணியின் தலைவரும், நவ்ஷேரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரவீந்தர் ரெய்னா கூறுகையில், மசாரத் ஆலம் அரசியல் கைதி அல்ல என்றும் அவர் ஒரு தீவிரவாதி என்பதால் அவரது விடுதலை தேசத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், அவரை விடுவித்ததை பாரதிய ஜனதா ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றும் தெரிவித்தார்.
இதுபோன்று தேச விரோதிகளும், பாகிஸ்தானுக்கு ஆதரவான தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டால், கூட்டணி அரசை நடத்திச் செல்வது மிகுந்த சிரமம் ஆகிவிடும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே மசாரத் ஆலம் விடுதலை விவகாரத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications