கட்டிய மனைவியை நண்பர்கள் 3 பேரோடு சேர்ந்து பலாத்காரம் செய்த காமக்கொடூரன்
Subscribe to Oneindia Tamil
முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலத்தில் 20 வயது இளம்பெண் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ளது காசிபுர் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அவர் தனது நண்பர்கள் தான் சைனி, சித்து மற்றும் ஆரீப் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 10ம் தேதி தனது வீட்டில் வைத்து தாலி கட்டிய மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பலாத்காரம் செய்யப்பட்ட 20 வயது பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் கணவர் ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
கணவனே நண்பர்களோடு சேர்ந்து மனைவியை சீரழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications