மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்று உடலை மலையில் இருந்து கீழே தள்ளிய வாலிபர்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வாலிபர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்று உடலை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.

டெல்லியை சேர்ந்தவர் லக்ஷ்மி குப்தா(25). அவரது கணவர் சக்தி குப்தா. அவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி தான் திருமணம் நடந்தது. அவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரீசி மாவட்டத்தில் உள்ள வைஷ்னோ தேவி கோவிலுக்கு வந்துள்ளனர். வந்த இடத்தில் நேற்று முன்தினம் இரவு சக்தி தனது மனைவியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார்.

Husband throttles wife, throws body off cliff at Vaishno Devi

இந்த கொலையை விபத்து போன்று காண்பிக்க அவர் தனது மனைவியின் உடலை மலை உச்சியில் இருந்து கீழே வீசினார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை காணவில்லை என்று சக்தி புகார் அளித்தார்.

இந்நிலையில் லக்ஷ்மியின் உடல் லம்பிகிரி பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாருக்கு சக்தி மீது சந்தேகம் ஏற்பட்டு லக்ஷ்மியின் பெற்றோருக்கு போன் செய்தபோது கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனையாக இருந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சக்தியை பிடித்து விசாரித்தபோது அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து போலீசார் சக்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+