ஹைதராபாத் திருமண விழாவில் சிக்கனுக்காக அடிதடி... இளைஞர் கொலை.. 15 பேர் மீது வழக்குப்பதிவு!
ஹைதராபாத்தில் திருமண விழாவில் இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

ஹைதராபாத்: நிச்சயதார்த்த விழாவில் சிக்கன் எடுத்து வருவது தொடர்பான சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள ஹூசைனி ஆலம் பகுதியில் கடந்த வாரம் திருமண விழா ஒன்று நடைபெற்றது. திருமணத்திற்கு முன் தினம் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

அப்போது, பந்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு சிக்கன் கிரேவி எடுத்து வர தாமதமானதாகக் கூறப்படுகிறது. பொறுமை இழந்த சிலர், கோபத்தில் சத்தமிட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு மண்டபத்தில் இருந்து வேகமாக வெளியேறியது.
பின்னர் சிறிது நேரத்திற்குப் பின், கோபமாக வெளியேறியவர்கள் 15 பேர் கொண்ட கும்பலாக கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மண்டபத்திற்கு திரும்பி வந்து பிரச்சினை செய்துள்ளனர். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை சரமாரியாக அவர்கள் தாக்கியுள்ளனர். சிறிது நேரத்தில் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்தத் தாக்குதலில் அன்வர் என்ற இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். மற்றொரு இளைஞரான சோஹாயிலுக்கும் படுகாயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சோஹாயிலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களில் அடிப்படையில் 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றவர்களைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிக்கன் கிரேவிக்காக நடந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தால், திருமண மண்டபம் களை இழந்து சோகத்தில் ஆழ்ந்தது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications