இந்திராணிக்கு பணம் தான் முக்கியம், மகளை கொன்றிருக்க வாய்ப்பு உள்ளது: ஷீனாவின் தந்தை

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: நான் தான் ஷீனா போரா, மிகைல் போராவின் தந்தை என சித்தார்த் தாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு உதவிய இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் முன்னாள் டிரைவர் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷீனா இந்திராணியின் முதல் கணவர் சித்தார்த்துக்கு பிறந்தவர் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சித்தார்த் தாஸ் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,

ஷீனா

ஷீனா

நான் தான் ஷீனா போரா, மிகைல் போரா ஆகியோரின் தந்தை. இதை மரபணு பரிசோதனை செய்து நிரூபிக்கத் தயாராக உள்ளேன்.

இந்திராணி

இந்திராணி

எனக்கும், இந்திராணிக்கும் திருமணம் நடக்கவில்லை. நானும் அவரும் திருமணமாகாமல் சேர்ந்து வாழ்ந்தோம். அவர் கடந்த 1989ம் ஆண்டு என்னை விட்டு பிரிந்து சென்றார். அதில் இருந்து நான் அவரை பார்த்தது இல்லை.

தந்தை

தந்தை

இந்திராணிக்கு எனது ஸ்டேட்டஸ் திருப்தி அளிக்காததால் பிரிந்து சென்றார். ஷீனாவுக்கு நான் தான் அவரின் தந்தை என்று தெரியும். ஷீனா 1987ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி பிறந்தார்.

கொலை

கொலை

ஷீனாவை இந்திராணி கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் இந்திராணிக்கு எப்பொழுது பணம் பணம் பணம் தான் முக்கியம். இந்த வழக்கு விசாரணையில் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளேன். நான் 1998ம் ஆண்டில் இருந்து கொல்கத்தாவில் வசித்து வருகிறேன் என்றார் தாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+