தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பேன்: குஷ்பு
டெல்லி: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தம்மை நியமித்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் ஆனால் அதற்கு தற்போது சாத்தியமில்லை என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியுடன் குஷ்பு சந்தித்து பேசினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமனம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

ராகுல் காந்தியை சந்தித்து தமிழக அரசியல் பற்றி விளக்கமளித்த குஷ்புவிடம், தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புது தலைவர் நியமிப்பது பற்றி ராகுல் கேட்டுள்ளார். ராகுலை சந்தி்த்த பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தமிழக காங்கிரஸ் தலைவரை சோனியா காந்தி விரைவில் அறிவிப்பார் என்று கூறினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தம்மை நியமித்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் ஆனால் அதற்கு தற்போது சாத்தியமில்லை என்றும் குஷ்பு தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான வேகத்திலேயே பிரதான அரசியல் கட்சிகள், உள்ளாட்சி தேர்தலுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ளும் பணிகளை தொடங்கி விட்டன.
ஆளும் கட்சி எதிர்க்கட்சி தேசிய கட்சி என உள்ளாட்சி தேர்தலுக்கு தங்களை வலுப்படுத்தும் பணியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டிருக்க காங்கிரஸ் கட்சியிலோ, மாநிலத் தலைவரே இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் 25ம் தேதி காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்தார். கட்சி மேலிடமும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது.












Click it and Unblock the Notifications