நான் ஜெயிக்க மாட்டேன்... ஷீலா தீட்சித் மகன் 'வெர்டிக்ட்' வருவதற்குள்ளாகவே விரக்தி!

நாளைதான் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இதை அறிய நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே தான் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று சந்தீப் தீட்சித் கூறியிருப்பது காங்கிரஸாரை எரிச்சல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சந்தீப் கூறுகையில், நான் என்னைப் பற்றி மட்டுமே பேச முடியும். நான் ஜெயிப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் நான் எனது கட்சி குறித்துப் பேச முடியாது என்று மணிரத்தினம் போல கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், எங்களது பிரசாரம் சிறப்பாக இல்லை. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வீசியது என்றார்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் டெல்லி கிழக்கில் போட்டியிட்டு வென்றவர் சந்தீப் தீட்சித். இம்முறை இத்தொகுதியில் அவருக்கு எதிராக பாஜக சார்பில் மகேஷ் கிரி போட்டியிட்டார். ஆம ஆத்மி சார்பில் காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி நிறுத்தப்பட்டார்.
டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்கும் என்று என்டிடிவி கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. பாஜக ஐந்திலும், ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும் வெல்லலாம் என்றும் என்டிடிவி கூறியுள்ளது.
ஏற்கனவே டெல்லி சட்டசபைத் தேர்தலில் சந்தீப்பின் தாயாரன ஷீலா தீட்சித் தோல்வி அடைந்தார் என்பது நினைவிருக்கலாம். கெஜ்ரிவாலிடம் அவர் தோற்றுப் போனார்.












Click it and Unblock the Notifications