For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் தான் பெண் ஏசு, இனி என்னை அன்னை என அழையுங்கள்: நடிகை ஓவர் பேச்சு

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: பாலிவுட் நடிகை சோபியா ஹயாத் தான் கன்னியாஸ்திரியாக மாறியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். மேலும் தான் பெண் ஏசு என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

சர்ச்சை மேல் சர்ச்சை கிளப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாலிவுட் நடிகை சோபியா ஹயாத். பாலிவுட்டில் வெற்றி பெற போராடிக் கொண்டிருந்த அவர் திடீர் என ஒரு நாள் கன்னியாஸ்திரியாகிவிட்டார்.

முஸ்லீமாக பிறந்த அவர் கிறிஸ்தவராகி கன்னியாஸ்திரியாகிவிட்டார். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பது பற்றி அவர் கூறுகையில்,

காதலர்கள்

காதலர்கள்

எனக்கு காதலர்கள் இருந்தார்கள். நான் செக்ஸ் வாழ்க்கையில் ஓவராக ஈடுபட்டேன். அப்படி இருக்கையில் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் தான் என்னுள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. எனக்கு ஏன் ஆசைகள் ஏற்படுவது நின்றுவிட்டது என்று யோசித்தேன். அதன் பிறகே நான் என்னை புரிந்து கொண்டேன். எனக்கு செக்ஸ் ஆசையே போய்விட்டது.

சோபியா

சோபியா

நடிகை சோபியாவை இனி எதிர்பார்க்க முடியாது. இனி அந்த சோபியாவை நீங்கள் பார்க்கவே முடியாது. நான் இனி ஆன்மீக பாதையில் செல்லப் போகிறேன். ஒரு பெண்ணை உடல் அளவில் பார்ப்பதை நிறுத்துங்கள்.

பெண் ஏசு

பெண் ஏசு

நான் தான் பெண் ஏசு. இனி என்னை அன்னை சோபியா என்றே அழைக்க வேண்டும். நாம் யார், வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பது பற்றிய உண்மையை நான் அனைவருக்கும் எடுத்துக் கூறுவேன்.

இல்லை

இல்லை

நான் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை. இனி எனக்கு அது தேவையும் இல்லை. அதன் பிறகே செக்ஸ் என்பது புனிதமானது என்பது புரிந்தது என்று சோபியா தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Sofia Hayat has revealed the reason behind her drastic change. She calls herself woman Jesus and asks others to address her as mother.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X