அம்மா தாயே.. நான் நல்லா கொலை பண்ணனும்.. அருள் புரிவாய் காளி.. பகீர் கொலையாளி!
கொலை செய்யும்முன் 108 முறை மந்திரம் சொல்வேன் என குற்றவாளி தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஹரியானா: "அம்மா... தாயே.. நான் நல்லா கொலை பண்ணனும்"... இப்படித்தான் அவர் சொல்லுவாராம்!
ஹரியானாவை சேர்ந்த 7 முதல் 8 பேர் வரை கொலை செய்த விநோதமான தொடர் கொலையாளியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கொஞ்ச நாளாகவே ஹரியானாவில் தொடர்ந்து கொலையும், கொள்ளையுமாக நடந்து வருகிறது. இது குறித்து ஹரியானா போலீசாரும் எவ்வளவோ முட்டி மோதி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேட ஆரம்பித்தனர்.
தனி ஒருவன்
கடைசியில் பார்த்தால், வரிசையாக கொலை செய்ததும், கொள்ளை அடித்ததும், கும்பல் இல்லை, ஒரே ஒருத்தர்தான் என்றும் அவர் பெயர் சின்ஹா என்பதும் தெரியவந்தது.
மடக்கி பிடித்தனர்
இவர்தான் முக்கிய குற்றவாளி என்பதால் பல வகைகளில் இவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினார்கள். கடைசியில் சின்ஹாவை போலீசார் ரவுண்டு கட்டி சுற்றி வளைத்து பிடித்தும் விட்டனர். பிறகு தங்கள் பாணி விசாரணையை சின்ஹாவிடம் போலீசார் ஆரம்பித்தனர்.
600 கொள்ளைகள்
அப்போது சின்ஹா வாக்குமூலத்தில் சொல்லும்போது, இதுவரைக்கும் கிட்டத்தட்ட 500 முதல் 600 கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கிறாராம். 7 கொலை செய்திருக்கிறாராம். பஞ்சாப், குருஷேத்ரா, ஃபரிதாபாத், பல்வாள் என முக்கிய ஊர்களில்தான் இவர், கொலை, கொள்ளை நடத்துவது வழக்கமாம்.
108 முறை மந்திரம்
அதோடு, ஒவ்வொருவரையும் கொலை செய்வதற்கு முன்னாடி, காளி கோயிலுக்கு போவாராம். அங்கே 108 முறை காளி மந்திரத்தை உச்சரித்துவிட்டு தான் கொலை ஆகட்டும், கொள்ளை ஆகட்டும், எதுவானாலும் இறங்குவாராம். காளியை கும்பிடாமல் கொலை செய்ததே கிடையாதாம் இந்த பக்திமான்! இந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து நின்றனர்.