Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவ்வளவு கோடியா? ஒரு தேர்தல் வியூகத்துக்கான சம்பளம் இதுதான்! வாயை பிளக்க வைத்த பிரசாந்த் கிஷோர்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளராக வலம் வந்த பிரசாந்த் கிஷோர் தற்போது சொந்தமாக கட்சி தொடங்கி உள்ளார். ஜன் சுராஜ் என்ற பெயரில் பீகாரை மையப்படுத்தி அரசியல் கட்சி தொடங்கி தற்போது செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்க ஒரு கட்சியிடம் இருந்து அவர் வாங்கும் கட்டணம் குறித்து முதல் முறையாக கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர்.. நம் நாட்டின் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர். இவர் பாஜக, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், திமுகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வெற்றி பெற வைத்துள்ளார். 2014 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு முக்கிய ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் வழங்கி வெற்றி பெற செய்தார்.

prashant kishor fee

அதன்பிறகு மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜிக்கும் ஆலோசனைகளை வழங்கி வெற்றி பெற செய்தார். அதேபோல் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் பிரசாந்த் கிஷோர் தான் வியூகங்கள் வகுத்து கொடுத்து வெற்றி பெற வைத்தார்.

இப்படி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்க பிரசாந்த் கிஷோர் பல கோடிகளை கட்டணமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதை கைவிட்டுள்ள பிரசாந்த் கிஷோர் சொந்தமாக கட்சி தொடங்கி உள்ளார். ஜன் சுராஜ் என்ற பெயரில் பீகாரில் அவர் கட்சி தொடங்கி உள்ளார். அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு வருகிறார். பீகாரில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலை குறிவைத்து பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். தற்போது பிரசாந்த் கிஷோர் பீகார் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே தான் பீகாரில் தற்போது காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நவம்பர் 23ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதில் பெலாகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கார்க், தாரகி உள்ளிட்ட 4 தொகுதிகளில் பிரசாந்த் கிஷோர் தனது கட்சியான ஜன் சுராஜ் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். இவர்களுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் பெலாகஞ்ச் தொகுதியில் போட்டியிடும் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் முகமது அம்ஜாத்துக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் நேற்று பிரசாரம் மேற்கொண்டு பேசினார். இஸ்லாமிய மக்களை சந்தித்து அவர் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்கும்படி கூறினார்.

அப்போது பிரசாந்த் கிஷோர் தனது தேர்தல் வியூக பணிக்கு ஒரு கட்சி அல்லது அரசியல் தலைவரிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கும் தொகையை வெளிப்படையாக கூறி அனைவரையும் வியக்க வைத்தார். இதுபற்றி பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: வெவ்வேறு மாநிலங்களில் உள்ள 10 அரசுகள் எனது பிரசார வியூகத்தால் தான் இயங்கி வருகின்றன. என்னுடைய பிரசாரத்துக்கும், மேடை அமைப்பதற்கும் போதிய அளவு பணம் இருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நான் பலவீனமானவன் என்று நினைக்கிறீர்களா? பீகாரில், என்னுடைய கட்டணத்தைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை.

ஒரு தேர்தலில் நான் ஒருவருக்கு அறிவுரை கூறினால் எனது கட்டணம் ரூ. 100 கோடி அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரே ஒரு கட்சிக்கு வியூகம் வகத்து கொடுத்தால் போதும் எனது பிரசாரத்துக்கு தேவையான நிதியை என்னால் கொடுக்க முடியும்'' என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+