சி.பி.ஐ. நற்பெயரை காக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்: ரஞ்சித் சின்ஹா
டெல்லி: சி.பி.ஐ.யின் நற்பெயரைக் காக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் என்று சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவிக்கையில், ''இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள் தங்கள் புலனாய்வுத் திறன்களை வளர்த்துக்கொள்ள சி.பி.ஐ. அகாடமியில் உரிய பயிற்சி பெற வேண்டும்" என்று கூறியது.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.பி.லோகுர் அடங்கிய அமர்வு, ''நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக தனிப்பட்ட கருத்து எதையும் கூற வேண்டாம். சட்டரீதியான விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.
இதுகுறித்து டெல்லியில் ரஞ்சித் சின்ஹா கூறும்போது, ''சி.பி.ஐ.யின் நற்பெயரைக் காக்கவே இந்த விவகாரத்தில் நான் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருந்தது. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்தேன்.
நான் முக்கியமானவன் அல்ல, எனது அமைப்புதான் (சி.பி.ஐ.) முக்கியமானது. அந்த அமைப்பின் கௌரவத்தைக் காப்பாற்றியதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications