சி.பி.ஐ. நற்பெயரை காக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்: ரஞ்சித் சின்ஹா
டெல்லி: சி.பி.ஐ.யின் நற்பெயரைக் காக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன் என்று சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவிக்கையில், ''இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள் தங்கள் புலனாய்வுத் திறன்களை வளர்த்துக்கொள்ள சி.பி.ஐ. அகாடமியில் உரிய பயிற்சி பெற வேண்டும்" என்று கூறியது.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.பி.லோகுர் அடங்கிய அமர்வு, ''நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக தனிப்பட்ட கருத்து எதையும் கூற வேண்டாம். சட்டரீதியான விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.
இதுகுறித்து டெல்லியில் ரஞ்சித் சின்ஹா கூறும்போது, ''சி.பி.ஐ.யின் நற்பெயரைக் காக்கவே இந்த விவகாரத்தில் நான் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருந்தது. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்தேன்.
நான் முக்கியமானவன் அல்ல, எனது அமைப்புதான் (சி.பி.ஐ.) முக்கியமானது. அந்த அமைப்பின் கௌரவத்தைக் காப்பாற்றியதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications