தப்பு செய்துவிட்டேன்: விமானத்தில் சில்மிஷம் செய்த தொழில் அதிபரின் வெட்கம்கெட்ட பேச்சு
புவனேஸ்வர்: இன்டிகோ விமானத்தில் பெண்ணை தகாத முறையில் தொட்டது தவறு தான் என்று தொழில் அதிபர் வெட்கமே இல்லாமல் சிரித்தபடி கூறும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 27ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் இன்டிகோ விமானத்தில் மும்பையில் இருந்து புவனேஸ்வருக்கு சென்றார். அப்போது அதே விமானத்தில் பயணம் செய்த 60 வயது தொழில் அதிபர் ஒருவர் தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த பெண்ணை கண்ட இடத்தில் தொட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண் அவரை திட்டியதை தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார்.
விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் வைத்து அந்த நபரை திட்டியதை அந்த பெண் மீண்டும் ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குற்றம் செய்த தொழில் அதிபர் வெட்கமே இல்லாமல் சிரித்துக் கொண்டே பேசுகிறார்.
அவர் கூறுகையில்,
நான் தவறுதலாக அந்த பெண்ணை தொட்டுவிட்டேன். அது மிகப் பெரிய தவறு தான். அனைவரும் தவறு செய்யத் தான் செய்கிறார்கள். அதனால் என்னை மன்னித்துவிடுங்கள். நானும் ஒரு பெண்ணுக்கு தந்தை தான் என்று தெரிவித்துள்ளார்.
அந்த பெண் எடுத்த அந்த 2 வீடியோக்களும் இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.












Click it and Unblock the Notifications