அந்தப் பெண் வெட்டவில்லை.. நானே ஆணுறுப்பை அறுத்து விட்டேன்.. கேரள சாமியார் பரபர வாக்குமூலம்
திருவனந்தபுரம்: எனது ஆணுறுப்பை சட்ட மாணவி வெட்டவில்லை. நானேதான் அறுத்துக் கொண்டேன் என்று கேரள சாமியார் கங்கேசானந்தா என்கிற ஸ்ரீஹரி கூறியுள்ளதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இளம் சட்ட மாணவியை ஆறு வருடத்திற்கும் மேலாக பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தி சித்திரவதை செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் இந்த சாமியார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மாணவி கடும் ஆவேசத்தில் சாமியாரின் ஆணுறுப்பை அறுத்து வீசிய சம்பவம் கேரளாவை பரபரப்புக்குள்ளாக்கி விட்டது.
திருவனந்தபுரத்தில் சிகிச்சை
கொல்லத்தைச் சேர்ந்தவர் இந்த சாமியார். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை தனி வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நீதிபதி விசாரணை
இவரிடம் மாஜிஸ்திரேட் நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவரது காவலை ஜூன் 3ம் தேதிக்கு நீட்டித்து உத்தரவிட்டார். உடல் நலம் தேறியதும் சாமியார் சிறையில் அடைக்கப்படுவார்.
அமைதி
முன்னதாக மாஜிஸ்திரேட் விசாரணையின்போது முதலில் எதுவும் பேசாமல் இருந்துள்ளார் சாமியார். திரும்பத் திரும்ப மாஜிஸ்திரேட் பல கேள்விகளைக் கேட்டும் கூட அவர் அதற்குப் பதிலளிக்கவில்லையாம்.
நானே அறுத்துக்கிட்டேன்
அதேசமயம், போலீஸார் நடத்திய விசாரணையின்போது தானே ஆணுறுப்பை அறுத்துக் கொண்டதாகவும், மாணவி அறுக்கவில்லை என்றும் அவர் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.