நான் அந்த பெண்ணை பார்த்து உச்சா தான் போனேன், "அப்படி"ப் பண்ணலை: மும்பை வாலிபர்
மும்பை: அமெரிக்க பெண் எழுத்தாளரை பார்த்து சுய இன்பம் அனுபவிக்கவில்லை, நான் சிறுநீர் கழித்ததை தான் அவர் அப்படி தெரிவித்துள்ளார் என மும்பை வாலிபர் கோபால் வால்மிகி தெரிவித்துள்ளார்.
மும்பை கொலாபா பகுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் மரியானா அப்டோ கடந்த திங்கட்கிழமை காலை நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் தன்னை பார்த்துக் கொண்டே சுய இன்பம் அனுபவித்ததை அவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார்.
இதை பார்த்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக கோபால் வால்மிகி என்ற வாலிபரை புதன்கிழமை கைது செய்தனர்.
அவர் விசாரணையில் கூறுகையில்,
நான் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த வெளிநாட்டு பெண் நான் ஜிப் போடுவதை பார்த்து தவறாக புரிந்து கொண்டார். அவர் என்னைப் பார்த்து அலறத் துவங்கிவிட்டார். அவர் தவறாக புரிந்து கொண்டு என் மீது பழிசுமத்தி பொய்யான புகார் அளித்துள்ளார் என்றார்.