மே.வங்கத்தில் காங்.-ல் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்ப்பதுதான் இலக்கு: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்த்து கட்சியை வலிமைப்படுத்துவதுதான் தமது முதல் இலக்கு என்று அம்மாநில காங். தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.
மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. 2016 சட்டசபை தேர்தலில் 294 இடங்களில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியாக அமர்ந்தது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் செல்வாக்கை நிலைநிறுத்தும் வகையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. திரிணாமுல் மற்றும் பாஜகவுக்கு எதிராக இடதுசாரிகள் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்பது ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் நிலைப்பாடு.
இதனிடையே மேற்கு வங்க மாநில தலைவராக பொறுப்பேற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி திரிணாமுல், பாஜகவுக்கு போன தலைவர்களை மீண்டும் காங்கிரஸில் இணைப்பேன். அவர்களுக்கான முழுமையான மரியாதை, உரிய அங்கீகாரம் காங்கிரஸ் கட்சியில் வழங்கப்படும் என்றார்.
மேலும் வரும் தேர்தலில் நிச்சயம் எங்களது வாக்கு வங்கியை அதிகரிப்போம். அதற்கான அத்தனை வியூகங்களையும் வகுத்துச் செயல்படுவோம் எனவும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ், இடதுசாரி வாக்குகள் பாஜகவுக்கு மடைமாறிப் போயிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications