ஜெ. சொன்ன பிறகும் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய மறுப்பது ஏன்? சசிகலா புஷ்பா பரபரப்பு பேட்டி
வேறு யாருக்கோ எம்பி பதவியை தர திட்டமிட்டுள்ளேன், பதவியை விட்டுக்கொடு என ஜெயலலிதா என்னிடம் கேட்டிருந்தால் நானே விட்டுக்கொடுத்திருப்பேன். ஆனால் அவர்கள் என்னை நடத்திய விதம்தான் ராஜினாமா செய்ய நான் மறுப்பதற்கு காரணம் என்று சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
டெல்லியில் நிருபர்களுக்கு சசிகலா புஷ்பா கூறியதாவது: காலை முதல் மாலை வரை நான் துன்புறுத்தப்பட்டேன். எனது செல்போனையும் பறித்துக் கொண்டனர்.
சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்தபோது கூட, விமானத்தில் அங்கும் இங்கும் நகர விடவில்லை. அவர்களே விமான டிக்கெட் போட்டுதான் கூட்டி வந்தனர்.

வேறு யாருக்கோ எம்பி பதவியை தர திட்டமிட்டுள்ளேன், பதவியை விட்டுக்கொடு என ஜெயலலிதா என்னிடம் கேட்டிருந்தால் நானே விட்டுக்கொடுத்திருப்பேன். ஆனால் அவர்கள் என்னை நடத்திய விதம்தான் ராஜினாமா செய்ய நான் மறுப்பதற்கு காரணம்.
போயஸ் தோட்டத்தில் ஒரு நாயைப் போல அடைத்து வைத்திருந்தனர். வெளியே எனது குடும்பத்தார் காரில் இருந்தனர். அவர்களிடம் சென்று பேசிவிட்டு வருகிறேன் என்று கேட்டதற்கு கூட என்னைவிடவில்லை.
சசிகலாதான், ராஜினாமா கடிதத்தை எப்படி எழுத வேண்டும் என எழுதி வாங்கினார். டெல்லியில், ராஜ்யசபா துணை தலைவரிடம் தம்பிதுரை என்னை அழைத்து சென்று, ராஜினாமா செய்வதாக கூறும்படி வற்புறுத்தினார். நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டேன். இதன்பிறகுதான் நாடாளுமன்றத்தில் பேசினேன்.












Click it and Unblock the Notifications