எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடியவே முடியாது: ஜெ.வுக்கு சசிகலா புஷ்பா சவால்- காங். ஆதரவு!
டெல்லி: தமக்கு எத்தனை மிரட்டல் வந்தாலும் எம்.பி. பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்யவே முடியாது என்று ராஜ்யசபாவில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா சரமாரியாகத் தாக்கியிருந்தார். இது குறித்து அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று போயஸ் தோட்டத்தில் சசிகலா புஷ்பாவிடம் விசாரணை நடத்தினார்.
இதனிடையே இன்று ராஜ்யசபாவில் திடீரென பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா தம்மை அறைந்ததாகவும் தம்மை எம்பி பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாகவும் அடுத்தடுத்தாக புகார் கூறினார். இது பெரும் புயலைக் கிளப்பியது.

நோ ராஜினாமா
மேலும் தமது அரசியல் சாசன எம்.பி. பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்று ஜெயலலிதா நிர்பந்திக்கிறார்; மிரட்டுகிறார்கள்; சித்ரவதை செய்கின்றனர்; எத்தனை மிரட்டல் வந்தாலும் தாம் ஒருபோதும் எம்.பி. யை ராஜினாமா செய்யவே மாட்டேன்; செய்ய முடியாது. நான் எம்.பி.யாகவே நீடிப்பேன் என்றார்.

சசிகலாவுக்கு எதிர்ப்பு
இதற்கு அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை பேசவிடாமல் ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் அமரச் செய்தார்.

காங்கிரஸ் ஆதரவு
ஆனால் காங்கிரஸ் கட்சியின் குலாம்நபி ஆசாத் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவு தெரிவித்தார். சசிகலா புஷ்பாவை தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என்றும் குலாம்நபி ஆசாத் வலியுறுத்தினார்.

ஆவேசமும் அழுகையும்...
தொடக்கத்தில் ஆவேசமாக பேசினார் சசிகலா புஷ்பா. இந்த நாட்டில் பெண் எம்பிக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கிறது? எனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனக்கு அரசு பாதுகாப்பு தர வேண்டும் என்று முழங்கியவர் கடைசியில் கண்ணீர்விட்டு கதறி பேச்சை முடித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications