தெரியாமல் தொடையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட விமானப்படை துணைத் தளபதி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய விமானப்படையின் துணைத் தளபதியான ஏர்மார்ஷல் எஸ்.பி. தியோ தொடையில் குண்டடி பட்டுக் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது துப்பாக்கி கைதவறி தொடையில் சுட்டு விட்டதால் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து இன்னும் விமானப்படைத் தரப்பில் அதிகாரப் பூர்வ தகவல் ஏதும் இல்லை. அவரது உடல் நிலை குறித்த விவரமும் வெளியிடப்படவில்லை.

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் துணைத் தளபதியாக பணியாற்றி வருகிறார் தியோ. இவர் வெலிங்டனில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றவர் ஆவார். 1979ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி விமானப்படையில் பைலட்டாக சேர்ந்து தனது சேவையைத் தொடங்கியவர்.












Click it and Unblock the Notifications