சசிகலாவுக்கு சிறப்பு சலுகை: பெங்களூரு சிறையில் ஐஏஎஸ் அதிகாரி 2 மணிநேரம் விசாரணை!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தினார்.
கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் சசிகலா கும்பலிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்ததாக டிஐஜி ரூபா அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து ரூபாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்களும் நேற்று வெளியாகி உண்மைதான் என்றன.
இந்நிலையில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்த புகார் குறித்து ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் விசாரணை இன்று நடத்தினார். ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்ததாக புகார் எழுந்ததை அடுத்து வினய்குமார் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு சிறையில் 2 மணிநேரம் விசாரணை மேற்கொண்டது.