பேச்சுவார்த்தையில் சீறிய முதல்வர்.. பணிந்த கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.. வேலை நிறுத்தம் வாபஸ்
திருவனந்தபுரம்: லஞ்ச ஒழிப்பு அமைப்பு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூண்டோடு லீவு எடுத்து போராட முடிவு செய்த நிலையில், முதல்வர் தலையீட்டால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
கேரள மாநில லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் ஜேக்கப் தாமஸ் தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் குற்றம்சாட்டிவருகிறார்கள்.

எனவே திங்கள்கிழமையான இன்று ஒரு நாள் கேரள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் விடுப்பு எடுக்க முடிவு செய்துள்ளதாக ஐஏஎஸ் அதிகாரிகள் நடுவேயான வாட்ஸ்அப் குழுக்களில் தகவல்கள் பரவின.
அதேற்கேப பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தலைமைச் செயலரிடம் விடுப்பு கடிதம் கொடுத்தனர். ஊழலுக்கு அங்கீகாரம் அளிக்க கோரி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போராட்டம் தொடங்கியுள்ளதாக ஒரு தரப்பும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக மறுதரப்பும் கூறிவருவதால் கேரள அதிகாரிகள் மட்டத்தில் கொந்தளிப்பு நிலவியது.
இந்த மிரட்டலுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நிர்வாக குழறுபடியை தடுக்க, முதல்வர் பினராயி விஜயன், இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, போராட்டத்திற்கு தனது கடும் ஆட்சேபனைகளை தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கையில் அரசுக்கு பங்கு கிடையாது. ஆனால் நீங்களோ அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளீர்கள். இதை எனது அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று சீறினார் பினராய் விஜயன். இறுதியில் அதிகாரிகள் இறங்கி வந்து தங்கள் வேலை நிறுத்த மிரட்டலை வாபஸ் பெற்றனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications