இந்தியாவில் தொடர் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி! உளவுத்துறை எச்சரிக்கை!!
டெல்லி: இந்தியாவின் பல இடங்களில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடலாம் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அல்-கொய்தாவுக்கு அடுத்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர் தற்போது சர்வதேச அளவில் அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்துள்ளனர். ஈராக் மற்றம் சிரியாவில் மட்டும் இந்த அமைப்பில் 2 லட்சம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலும் பெருநகரங்களான மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களிலும் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாளர்கள் பெருகி வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கல்யான் பகுதியிலிருந்து ஏற்கனவே 4 இளைஞர்கள் சிரியா சென்று ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து போரிட்டனர். அங்கிருந்து திரும்பிய வந்த அரீப் மஜீத்திடம், தேசிய புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் மேலும் ஐந்து இந்தியர்கள் சிரியாவில் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் பெருநகரங்களில் ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததால் ஐ.எஸ்அமைப்புக்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசு தடை விதித்தது.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இந்தியாவில் செயல்படுபவர்களை உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர். நாடு முழுவதும் 35 பேர், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் கொள்கைகளை பரப்புபவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் நேரடி தலையீடு இந்தியாவில் இல்லை என்றாலும், அவர்களின் ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள துருக்கி அமைப்புகள் மற்றும் துருக்கி நாட்டினர் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது. அதனால் இந்தியாவில் துருக்கி நாட்டினர் மற்றும் மையங்கள் மீது, ஐ.எஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என அனைத்து மாநில போலீசாருக்கும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், அதை தடுக்க தயார் நிலையில் இருக்குமாறும் விமான நிலையங்களில் பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications